Sunday, September 9, 2007

வாழ்வியலும் திணையும்-சென்னை

ஐவகை திணையின் நிலத்தினைப் பற்றி அறிந்தோம்.
ஐந்திணையும் ஒருங்கே அமைந்தது நம் சிங்கார(?)சென்னை.

குறிஞ்சி திணை-பரங்கி மலை என்றழக்கப்படும் மவுண்ட் செயின்ட் தாமஸ் கிண்டியின் அருகில் சிறு சிறு குன்றுகள் உள்ளது. இங்குள்ள கிறித்துவ தேவாலயம் புகழ் பெற்றது.ஆனால் குறிஞ்சி திணைவாசிகளெல்லாம் இங்கில்லை.

முல்லை திணை-தெற்காசியாவிலேயே பெரியதான,இயற்கையாகவே அமைந்த வண்டலூர் தேசிய விலங்கியல் பூங்கா சற்று மலைபாங்கானதும்,அடர்ந்த வனமாகும். இப்பொழுது பறவைகள் சரணாலயமும் உருவாகியிருக்கிறது.இத்திணை மக்களின் தொழிலை இப்பகுதி மக்கள் செய்து வருகிறார்கள்.அண்ணா பல்கலை கழகம்,ராஜ் பவன்,சிறுவர் பூங்கா போன்ற பகுதிகள் மரங்களடர்ந்தாகும்.

மருத திணை-சென்னை நகரினை ஆறுகளும்,ஏரிகளும்,கால்வாயும்,
ஒரு காலத்தில் வளப்படுத்தின.ஆதாரம் போயஸ் கார்டன்,கற்பகம் தோட்டம்,பார்டர் தோட்டம்,அம்மணி அம்மன் தோட்டம் என்று தோட்டமும் தோப்புகளும் ஏராளம்.இப்பொழுது சென்னையைச் சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் தொழிலும்,பண்ணைகளும்
உண்டு.காய்கறியும்,கீரையும் முக்கிய பயிர் வகைகள்.முந்திரி மற்றும் பழங்கள் சாகுபடியும் உண்டு.

நெய்தல் திணை-இதை பற்றி அதிகம் கூற வேண்டாம்.உலகிலேயே 2வது பெரிய அழகிய மெரினா என்னும் கடற்கரையை தன்னகத்தேக் கொண்டது.மீன் பிடித் தொழில் சிறந்து விளங்குகிறது இங்கு.எண்ணூர்,இராயபுரம்,காசிமேடு,இராமாபுரம் போன்ற மீன் பிடி தலங்களும், பெரிய துறைமுகமும் உள்ளது.

பாலைத் திணை-புழுதிமண் பறக்க,வறண்ட பகுதிகள் சென்னையைச் சுற்றியுள்ளது.கோடைகாலத்தில் அனைத்து பகுதியும் பாலைதான்.இத்திணையின் தொழிலும்(வழிப்பறிக்கொள்ளை,ஊர் புகுந்து சூறையாடல்)இங்கு அமோகம் தான்.

2 comments:

சிவஹரி said...

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_7942.html

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7942.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…