Thursday, January 10, 2013

எவ்வழி நல்லவர் ஆடவர்

எவ்வழி நல்லவர் ஆடவர்

நாட்டில் நடக்கும் பிரச்சனைக்கு நாமும் ஏதாவது எழுதவில்லை என்றால் நாளைய வரலாறு நம்மை தள்ளி வைத்துவிடும்.


நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம் ஆனால் 
பெண்கள்  இப்படி இருக்க வேண்டும்,அப்படி இருக்க வேண்டும் என்று அனேகமாக அனைவரும் கருத்து தெரிவித்துவிட்டார்கள்.

ஔவையாரின் காலத்திலும் ஆண்கள் இப்படி தான் இருந்திருப்பார்கள் போலும்.அவர் மட்டுமே  ஆண்களுக்கு அறிவுரையை நாசூக்காக,நாகரிகமாக    கூறுகிறார்.  


நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.


என்று ஔவையார் புறநானுற்றில் கூறுகிறார்.
எந்நாளுக்கும் பொருத்தமான உரையென விளங்குகிறது.

இதில் ஆடவர் என்பதை உரையாசிரியர்கள் நன்மக்கள் என்று ஏற்றி 
குறிப்பிடுகின்றனர்.

நாடோ,காடோ எதுவாக இருந்தாலும் ஆடவர்கள் நல்லவர்களாக இருந்தால் அந்நிலம் நல்ல நிலமாக இருக்கும்.

நிலமே! நீ  ஒன்றில் நாடே ஆகுக.அதுவன்றி ஒன்றில் காடே ஆகுக.ஒன்றில் பள்ளமே ஆகுக.அதுவன்றி ஒன்றில் மேடே ஆகுக.எவ்விடத்தில் ஆண்மக்கள் 
நல்லவரோ அவ்விடத்தில் நீயும் நல்லதாக விளங்குகிறாய்.நீ வாழ்க..

(புறநானுறு  உரை புலவர் அ.மாணிக்கம்)

ஆனால் நாங்கள் எல்லாம் யாரு ...இதையெல்லாமா கேட்போம் ஹீ ஹீ...




No comments: