Sunday, September 9, 2007

பாலைத் திணை

பாலை என்பது வேனிற் காலத்தில் குறிஞ்சி,முல்லை வறண்ட திரிபே பாலை எனப்படும்.(உடன்குடி அருகில் 12 மைல் சுற்றளவிற்கு உள்ள தேரிகாடு என்னும் மணற்பாங்கான பகுதி தமிழகத்திலுள்ள பாலைவனம் எனலாம்.அப்பாலைவனச் சோலைகளில் அய்யனார் கோவில்கள் உள்ளது.)

பெரும்பொழுது-இளவேனிற்காலம்(சித்திரை,வைகாசி)
முதுவேனிற்காலம்(ஆனி,ஆடி)
பின்பனிக் காலம்(மாசி,பங்குனி)
சிறுபொழுது-நண்பகல்(பகல்10மணியிலிருந்து 2 மணிவரை)

கருப்பொருள்கள்;
தெய்வம்-கொற்றவை
உயர்ந்தோர்-விடலை,காளை,மீளி,கன்னி,எயிற்றி
தாழ்ந்தோர்-எயினர்,எயிற்றியர்,மறவர்,மறத்தியர்
பறவை-புறா,பருந்து,கழுகு,எருமை
விலங்கு-செந்நாய்,
ஊர்-குறும்பு
நீர்-வற்றின சுனை,வற்றின கிணறு
பூ-குரா மலர்,மரா மலர்,பாதிரி மலர்
மரம்-உழிசை,பாலை,ஓமை,இருப்பை
உணவு-வழிப்பறி செய்தனவும்,ஊர் புகுந்து கவர்ந்தனவும்
பறை-பூசல் பறை,ஊரெறி பறை,நிறை கோட்பறை
யாழ்-பாலை யாழ்
பண்-பஞ்சுரம்
தொழில்-நிரைகவர்தல்,வழிப்பறி செய்தல்,ஊர் புகுந்து சூரையாடுதல்.[/LEFT]

உரிப்பொருள்;பிரிதலும்,பிரிதல் நிமித்தமும.

பொருள் வினைவயின் தலைவியைப் பிரிந்த தலைவனின் நிலையை தேய்புரிப் பழங்கயிற்றினார் நற்றிணையில் பாவால் படம் பிடிக்கிறார்.

புறம் தாழ்வு இருண்ட கூந்தல் போதின்
நிறம்பெறும் ஈர்இதழ்ப் பொழிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண் டோன்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கஞ் செல்வாம் என்னுஞ்
செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல்
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏத்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கோல்என் வருந்திய உடம்பே.

தலைவியின் நினைப்பால் துயருற்று தலைவனின் நெஞ்சம் தவிக்கிறது.அதே நேரத்தில் பொருள் தேட வந்த வினை முடியாமல் திரும்ப கடமை உணர்வு தடுக்கிறது.காதல் நெஞ்சத்தையும் கடமை நெஞ்சத்தையும் இரு வலிய யானைக்கு ஒப்பீடுகிறார் புலவர்.இரு யானையும் பற்றி இழுக்கும் தேய்ந்த பழங்கயிறு போல என் உடல் வருந்துகிறது என்று காதலா கடமையா என்று அருமையான உவமையோடு உரைக்கிறார்.

No comments: