Sunday, September 9, 2007

குறிஞ்சித் திணை

பண்டைய தமிழர்கள் தங்கள் வாழ்வியலை சிறு கதை போல் சம்பவங்களை சிறு பாடலாக இயற்றினர்.
அதற்காக வரைமுறை;

ஒத்த தலைவனும் தலைவியும் தம்முள் துய்த்து,தாமே உணரத்தக்காக பிறருக்கு கூற இயலாததே அகத்திணை.

வீரம், கொடை,கல்வி,கீர்த்தி போன்றவை புறத்திணை.

திணை நிலம்,ஒழுக்கம் எனப் பொருள்படும்.

அகம் பற்றி முதலில் பார்போம்.
அகத்திணை 7 வகைகளாம்.
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
கைக்கிளை-ஒரு தலைக் காதல்
பெருங்கிளை-பொருந்தா காமம்

முதல் ஐந்திணைக்கும் முதற் பொருள்,கருப்பொருள்,உரிப்பொருள் உண்டு.இவையே ஓரு பாடலை வகைப்படுத்துகிறது.

இப்பொழுது குறிஞ்சி திணையை சற்று விரிவாக கண்போம்.
முதற் பொருள்-நிலமும்,பொழுதும்
நிலம்-மலையும் மலை சார்ந்த இடம்

சிறு பொழுது-யாமம் (இரவு10 மணியிலிருந்து 2 மணி வரை)
பெரும் பொழுது-குளிர் காலம்(ஐப்பசி,கார்த்திகை)முன் பனிக் காலம்
(ஆவணி,புரட்டாசி)

கருப் பொருள்-ஒவ்வொரு நிலத்திலும் பொழுதிலும் தோன்றும் பொருள்கள் கருப் பொருள்கள் எனப்படும்.
தெய்வம் வாழும் மக்கள்,உணவு,ஊர் போன்ற 14 கருப்பொருளாம்.
தெய்வம்-முருகன்
உயர்ந்தோர்-பொருப்பன்,வெற்பன்,சிலம்பன்,கொடிச்சி
தாழ்ந்தோர்-குறவர்,குறத்தியர்,கானவர்
பறவை-மயில்,கிளி
விலங்கு-யானை,புலி,சிங்கம்,கரடி,பன்றி
ஊர்-சிறுகுடி
நீர்-அருவி,சுனை
பூ-குறிஞ்சி,காந்தள்,வேங்கை
உணவு-தினை,ஐவனநெல்,மூங்கிலரிசி
பறை-தொண்டகப்பறை,வெறியாட்டுப்பறை,
யாழ்-குறிஞ்சி யாழ்
பண்-குறிஞ்சிப்பண்
தொழில்-வெறியாடுதல்,ஐவனநெல்,திணை விதைத்தல்,திணை காத்தல்,தேன் எடுத்தல்,கிழங்கு அகழ்தல்

உரிப்பொருள்-பாடுதற்குரிய பொருளாகிய(theme)காதல் வாழ்வில் தலைவன் தலைவியிடையே காணப்படும் உணர்ச்சிகளை ஐந்தாகப் பிரித்தனர்.
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் இத்திணையின் உரிப்பொருள்.

கலியில்,கபிலரின் குறிஞ்சிப் பாடல்;
இரவில் தலைவன் வருவது இன்பம் என்றபோதும்,வழியின் கொடுமையால் இனி இரவில் வரல் வேண்டா மலைசாரலில் பகலில் வருக என்கிறாள் தோழி.

கொடுவரி தாக்கி வேன்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்த்து மனத்து ஆகலின்,
கனவிற் கண்டு கதும்என வெரீஇப்
புதுவதாக மலர்ந்த வேங்கையை
அது என உணர்ந்து,அதன் அணிநலம் முருக்கிப்
பேணா முன்பின் தன்சினம் தணிந்து,அம்மரம்
காணும் பொழுதில் நோக்கம் செல்லாது
நாணி இறைஞ்சும் நன்மலை நன்னாட!
.......... ...... ........... ......... ......
.............. ................ .................
அதனால்
இரவில் வாரல்;ஐய;விரவுவீ
அகல் அறை வரிக்கும் சாரல்,
பெலும் பெறுவை இவள் த்தடமென் தோளே.

மிக வருத்தத்துடன் தாக்கிய வேங்கைபுலியை வென்றது ஓரு யானை.
களைப்பினால் அம்மலை சாரலில் ஓரு புறம் படுத்து உறங்கியது.நனவில் வந்த வேங்கையே கனவில் வந்தத்து.வரக் கண்டதும் சினங்கொண்டு,அருகில் புது மலர்கள் நிறைந்த வேங்கை மரத்தை புலி என்றெண்ணி சாய்த்து அழித்தது.அது மரம் எனக் காணும் பொழுது அதை பார்க்கவும் நாணங்கொண்டு தலை கவிழ்ந்து சென்றது.அந்நல்ல மலை நாட்டிற்கு உரியவனே.

இவ்வாறு படித்து இன்புறதக்கது சிறிதே பயிற்சிக் கொண்டால்.

No comments: