Sunday, September 9, 2007

மருதத் திணை

மருத திணை-வயலும் வயலும் சார்ந்த இடம்

பெரும்பொழுது-ஆறு பெரும் பொழுதும்
சிறுபொழுது-வைகறை(இரவு2யிலிருந்து6வரை)காலை(6யிலிருந்து10வரை)

கருப்பொருள்;
தெய்வம்-இந்திரன்
உயர்ந்தோர்- ஊரன்,மகிழ்நன்,கிழத்தி
தாழ்ந்தோர்-உழவர்,உழத்தியர்,கடையர்,கடைச்சியர்
பறவை-நாரை,அன்னம்,குருகு,தாரா
விலங்கு-எருமை,நீர் நாய்
ஊர்-பேரூர்,மூதூர்
நீர்-ஆறு,மனைக்கிணறு,பொய்கை
பூ-தாமரை,செங்கழுநீர்,குவளை
மரம்-காஞ்சி,வஞ்சி,மருதம்
உணவு-செந்நெல்,வெண்ணெல்
பறை-நெல்லரி பறை,மணமுழவு
யாழ்-மருத யாழ்
பண்-மருதப்பண்
தொழில்-செந்நெல்,வெண்ணெல் விளைத்தல்,திருவிழா அயர்தல்.

உரிப்பொருள்;ஊடலும் ஊடல் நிமித்தமும்.

நற்றிணையில் ஓரம்போகியார் உரிப்பொருளின் மீது மருத பாடலை எழுதியிருக்கிறார்.

முழவுமுகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவொழி களத்த பாவை போல
நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி
இன்றுதரு மகளிர் மென்தோள் பெறீஇயர்
சென்றீ-பெரும சிறக்கதின் பரத்தை!
பல்லோர் பழித்தல் நாணி,வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்பக்
கையிடை வைத்து மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல நனிபெரிது
உற்றநின் விழுமம் உவப்பென்
மற்றங் கூடும் மனைமடி துயிலே.


யானைக்கன்று கவளம் உண்ண வேண்டி,பாகன் குத்துக் கோலால்
குத்த,குத்துண்ட கன்று வெகுண்டு கவளத்தை தன்மீதே இறைத்துக் கொள்ளும்.அது போல ஊர்அலர்(பழிச்சொல்,தூற்றல்)தன் மீது விழுந்ததனால்,மார்ச்சனை முழவில் காய்ந்து போகும் வரை ஆடி பாவையாய் பாணனால் கொணரப்பட்ட பரத்தையை விட்டு இங்கு வந்தனையோ.நின் துயிலானது இன்னொரு நாளில் இங்கு நடக்கும்.விரைந்து செல்வாயாக,நின்னோடு நின் பரத்தையின் மென்தோளினைப் பற்றி சிறப்புறுவதாக.

No comments: