Friday, January 26, 2007

பட்டினத்தார் பாடல்கள்.

பிறக்கும் பொழுது கொடுவந்தது
இல்லை பிறந்துமண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவது
இல்லை இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்தது
என்று கொடுக்கஅறியாது
இறக்கும் குலாமருக்கு என்சொல்லு
வேன்கச்சி ஏகம்பனே
விளக்கம் :
பிறக்கும் பொழுது எதையும் நாம் கொண்டுவரவில்லை. இறக்கும் பொழுதும் நாம் சம்பாதித்த எதையும் கொண்டுபோக போவதுமில்லை. இதற்கிடையில் கிடைத்த செல்வமெலாம் ஈசனாகிய நீ கொடுத்தது என்று அறியாமல், அதை தன்னுடையது என்று கூறி பிறகு இறந்து போகும் மானிடர்களை, என்னவென்று சொல்வேன் இறைவா ?

No comments: