புறத்திணை ஓர் அறிமுகம்
தலைவனும் தலைவியும் தமக்குள் உய்த்து உணர்வது அகத்திணை
ஆகும்.
அதனை தவிர்த்த அனைத்தும் புகழ்,கொடை,வலி,போர்திறன் என்பன
புறத்திணை ஆகும்.
கரந்தைத் திணை:
பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டு வருதல்
“மலைத்தெழுந்தோர் மறம் சாயத்
தலைக் கொண்ட நிரை பெயர்த்தன்று”
கரந்தை என்பது “கொட்டைக் கரந்தை” என்னும் பூண்டு வகை.
வஞ்சித் திணை:
பகைவர் நாட்டைக் கொள்ள எண்ணிப் போரிடச் செல்லல்.
“வாடா வஞ்சி தலை மலைந்து
கூடார்மண் கொளல் குறித்தன்று”
இப்போர்ச் செயலுக்குரிய பூ வஞ்சிப் பூ.
காஞ்சித் திணை :
போர் செய்வதற்கு வந்த பகைவர்க்கு எதிர் சென்று ஊன்றுதல்.
”வேஞ்சினை மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சி சூடிக் கடிமணை கருதின்று.”
இப்போர்ச் செயலுக்குரிய பூ காஞ்சிப் பூ. காஞ்சி என்பது
ஒரு வகை மரம்.
நொச்சித் திணை :
பகைவரின் மதிலைக் காத்துக் கொள்ளுதல்.
”ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம்
காப்போர் சூடிய பூப்புக்ழ்ந் தன்று.”
இப்போர்ச் செயலுக்குரிய பூ நொச்சிப் பூ.
உழிஞ்த் திணை:
பகைவரின் மதிலை வளைத்துக் கொள்ளுதல்.
”முடிமிசை யுழியை சூடி ஒன்னார்
கொடி நுடங்கு ஆரெயில் கொளக்கரு தின்று”
இப்போர்ச் செயலுக்குரிய பூ உழிஞைப் பூ.உழிஞை என்பது
ஒரு வகைக் கொடி.
இது நொச்சித் திணையின் மாறான திணை.
“உழிஞையும் நொச்சியும் தம்முள் மாறே.
தும்பைத் திணை:
பகைவருடன் போர் செய்தல்
”சென்ங்களத்து மறம் கருதிப்
பைந்தும்பை தலைமலைந்தன்று”
இப்போர்ச் செயலுக்குரிய பூ தும்பைப் பூ.
தும்பை என்பது ஒரு வகைச் செடி.
வாகைத் திணை :
பகைவரை வெல்லுதல்
இலை புனை வாகை சூடி இகல் மலைந்து
அலைகடல் தானை அரசு அட்டு ஆர்ந்தன்று”
இப்போர்ச் செயலுக்குரிய பூ வாகைப் பூ.வாகை
என்பது பாலை நிலத்துக்குரிய மரம்.
பாடாண் திணை:
ஒருவனது புகழ், கொடை, வலி தண்ணளி முதலியவற்றை
ஆய்ந்து சொல்லுதல்.
ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று.
கைக்கிளை:
ஒருவரிடத்து மட்டும் உண்டாகும் ஒரு தலைக் காமம்.
இது ஆண்பாற் கைக்கிளை,பெண்பாற் கைக்கிளை என
இருவகைப்படும்.
பெருந்திணை:
பொருந்தக் காமம். இஃது ஆண்பாற் கூற்று,இருபாற் பெருந்திணை
என்ற இரண்டு பகுப்புக்களைக் கொண்டது.
No comments:
Post a Comment